Published : 14 Jun 2020 05:28 PM
Last Updated : 14 Jun 2020 05:28 PM

நேபாளத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று; ஒரே நாளில் 425 பேருக்கு பாதிப்பு

நேபாளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

உலகம் முழுவதும் சுமார் 7,895,777 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 432,882 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 4,056,063 பேர் சிகிச்சை முடிந்து கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்கா தொடர்ந்து கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கரோனா நோயாளிகள் மொத்த எண்ணிக்கை 5760 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிததுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x