Published : 13 Jun 2020 01:59 PM
Last Updated : 13 Jun 2020 01:59 PM

கரோனா வைரஸ் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கி வருகிறது: உலக சுகாதார அமைப்பு

கரோனா வைரஸ் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் சிறப்பு நிபுணரான மைக் ரியான் கூறும்போது, “கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கடுமையாகப் பரவி வருகிறது. தற்போதைய தகவலின்படி பிரேசில் கரோனா பரவலின் மையமாக தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க, ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். பிரேசிலில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருந்தால் தொற்று மீண்டும் பரவும்” என்றார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போதுவரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x