Published : 10 Jun 2020 08:32 PM
Last Updated : 10 Jun 2020 08:32 PM

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 38,965 ஆக அதிகரிப்பு

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 451 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணைக்கை 38,965 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் கரோனா தொற்றுக்கு 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிங்கப்பூரில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். 25,877 பேர் இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளில்தான் தற்போது அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளை செய்து வருகிறது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x