Published : 10 Jun 2020 04:05 PM
Last Updated : 10 Jun 2020 04:05 PM

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 5,387 பேருக்கு தொற்று

ஊரடங்கை அமல்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்ட நிலையில் பாகிஸ்தானில் ஒரே நாளில் அதிகபட்சமாக 5,387 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,387 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,702 அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று 84 பேர் கரோனாவுக்குப் பலியான நிலையில் பலி எண்ணிக்கையும் 2,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 36,308 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பஞ்சாப்பில் 43,460 பேரும், சிந்து மாகாணத்தில் 41,303 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

செவ்வாய்க்கிழமை உலக சுகாதார மையம் ஊரடங்கை அமல்படுத்துமாறு பாகிஸ்தானை கேட்டுக் கொண்ட நிலையில் தற்போது அதிகபட்ச தொற்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஏழை நாடு என்றும் ஊரடங்கைத் தளர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் முன்னரே தெரிவித்தார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட தன்னார்வலர்கள் குழுவை பாகிஸ்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x