Published : 04 Jun 2020 08:08 PM
Last Updated : 04 Jun 2020 08:08 PM

ஈரானில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கரோனா

தெஹ்ரான்

ஈரானில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம்.

ஈரானில் முதல் கரோனா தொற்று கடந்த பிப்ரவரி மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. மார்ச் மாதத்தில் கரோனா பரவல் உச்சம் அடைந்தது. அதே காலகட்டத்தில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஆனால் ஈரானில் தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரானில் கடந்த மார்ச் 30-ம் தேதி 3,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 3,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த நான்கு தினங்களாக தொற்று எண்ணிக்கை 3,000க்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் கூறும்போது, ''தற்போது கரோனா பரிசோதனை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர இரண்டாம் கட்டப் பரவலின் காரணமாக அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 59 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ள நிலையில் கரோனா பலி எண்ணிக்கை 8,071 ஆக உயர்ந்துள்ளது.

8.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஈரானில் இதுவரையில் 1,64,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x