Published : 03 Jun 2020 12:10 PM
Last Updated : 03 Jun 2020 12:10 PM

பிரேசிலில் கரோனா பலி 31,199 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு இதுவரை 31,199 பேர் பலியாகினர்.

இதுகுறித்து உல சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,262 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31,199 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 28,936 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் கரோனா தொற்றுக்கு இதுவரை 5,55,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரேசில் கடந்த இருவாரமாக கரோனா வைரஸின் மையமாக மாறி உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் (அமெரிக்காவில் 18,81,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்) , பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x