Published : 02 Jun 2020 03:59 PM
Last Updated : 02 Jun 2020 03:59 PM

அமெரிக்காவில் தொடரும் கரோனா பலி: 24 மணி நேரத்தில் 743 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 743 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைகழம் வெளியிட்ட தகவலில், “ கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 743 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,05,099 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கை பிற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 18,09,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 63, 89,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3, 77,889 பேர் உயிரிழந்துள்ளனர். 29, 24,078 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x