பொருளாதாரத்தை மீட்க தளர்வு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ்

பொருளாதாரத்தை மீட்க தளர்வு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ்
Updated on
1 min read

பொருளாதார நலனுக்கான ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்த பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பரவலை இரண்டு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக பொருளாதார சரிவையும், பெரும் வேலை இழப்பையும் உலக நாடுகள் சந்தித்துள்ளன. இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு பல்வேறு நாடுகள் ஊரடங்கில் தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் அரசும் புதிய தளர்வுகளை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து தொழில் நிறுவனங்கள் இயக்க பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்றும் பிற மாகாணங்களுக்கு செல்ல அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் கரோனா தொற்றால் 18,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 957 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in