Published : 28 May 2020 09:43 PM
Last Updated : 28 May 2020 09:43 PM
ஆப்கானிஸ்தானில் இதுவரை 13 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் இதுவரை 13,036 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 235 பேர் பலியாகி உள்ளனர். 1,209 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில்தான் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இனி வரும் நாட்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT