Published : 27 May 2020 07:13 AM
Last Updated : 27 May 2020 07:13 AM

சூதாட்ட மன்னன் ஸ்டான்லி ஹோ 98 வயதில் மறைவு

மக்காவ் சூதாட்ட கூடங்களின் மன்னன் ஸ்டான்லி ஹோ தனது 98 வயதில் காலமானார்.

தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மக்காவ் நகரத்தைமாபெரும் சூதாட்ட கூடங்களின் நகரமாக ஸ்டான்லி ஹோ மாற்றினார். கடந்த 2002 வரை சூதாட்ட பிசினஸில் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார். ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் வளர்ந்தார். சூதாட்டம், விடுதி என பல்வேறு தொழில்களில் வெற்றிக் கண்டவர். இவருடைய எஸ்ஜேஎம் ஹோல்டிங் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலர் ஆகும்.

இவருக்கு நான்கு மனைவிகளும் 17 பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் மகள்பேன்சி தான் அதிக அதிகாரத்துடன் இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x