Published : 26 May 2020 02:39 PM
Last Updated : 26 May 2020 02:39 PM
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சிறையிலிருந்து 7 ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. போர் சூழல் காரணமாக அங்கு கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனைகள் குறைவாக நடந்தப்பட்டு வந்ததன. இந்நிலையில் கடந்த வாரம்தான் சிரியாவில் மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த சூழலில் சிரியாவில் 7 ஐஎஸ் தீவிரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து சிரிய அரசு ஊடகங்கள் தரப்பில், “சிரியாவின் கிழக்குப் பகுதியில் அல் ஹவ்லா பகுதியில் உள்ள சிறைச்சாலையிலிருந்த 7 ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பித்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.
முன்னதாக மார்ச் மாதமும் குர்து கட்டுப்பாடு சிறையிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடிய நிலையில், தற்போது மீண்டும் சிறையிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பித்துள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
கரோனா பாதிப்பு
சிரியாவில் 106 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT