Published : 23 May 2020 04:53 PM
Last Updated : 23 May 2020 04:53 PM

ஐந்து மாதங்களுக்குப் பிறகு சீனாவில் யாருக்கும் இன்று கரோனா தொற்று இல்லை

ஐந்து மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்றை எதிர்கொண்டுவருகிற சீனாவில், முதல் முறையாக இன்று புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் 82,971 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் 78,258 பேர் குணமாகியுள்ளனர்; 4,634 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரையில் 16 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவில் குறைவான அளவில் இறப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்கா, சீனா அரசு உண்மையான தகவலை மறைப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தீவிரம் முற்றிலும் குறைந்துள்ள நிலையில் சீனா அதன் அன்றாடத்துக்கு திரும்பியுள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதில் சீனா பெரும் சாதனை நிகழ்த்தி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. தற்போது கரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ளபோதிலும், தொடர்ந்து மிக விழிப்புடன் செயப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x