Published : 23 May 2020 12:41 PM
Last Updated : 23 May 2020 12:41 PM
பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,001 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3, 30,890 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் கரோனா தொற்றுக்கு 21,116 பேர் பலியாகி உள்ளனர்” என்று செய்திகள் வெளியாகி உள்ளன,
தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 16, 45,094 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 3,26,448 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றின் புதிய மையமாக தென் அமெரிக்கா தற்போது மாறியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதாரஅமைப்பின் அவசர குழுவின் தலைவர் மைக் ரியான் கூறும்போது, “தென் அமெரிக்காவின் பல நாடுகள் குறித்து கவலையாக உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் கரோனா நோய்த் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் ஜூன்வரை பிரேசிலில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா கரோனாவை கட்டுப்படுத்த தவறி விட்டதாக கடுமையான விமர்சனத்து உள்ளாகி இருக்கிறார்.
உலகம் முழுவதும் சுமார் 53, 06,235 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3, 40,047 பேர் பலியாகி உள்ள நிலையில் 21, 60,156 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT