Published : 23 May 2020 11:07 AM
Last Updated : 23 May 2020 11:07 AM

ஆப்பிரிக்க நாடுகளில் 1,00,000 பேருக்கு கரோனா தொற்று

ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 1,00,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்பிரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் கூறும்போது, ”ஆப்பிரிக்காவில் இதுவரை 1லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 3,101 பேருக்கு கரோனாவால் உயிரிழந்துள்ளனர். சுமார் 39,416 பேருக்கு கரோனா தொற்றிலிருந்து விடுப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் 54 நாடுகளிலும் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. தொற்று தீவிரம் அதிகம் உள்ள நாடுகளில் ஊரடங்குகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுவெளியில் வரும்போது மக்கள் முக கவசங்கள் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்பிரிக்காவுக்கு ஒரு திருப்புமுனையாக கரோனா நோய் அமைந்திருக்கிறது. முந்தைய பேரழிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், இந்த வைரஸை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 53, 06,235 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3, 40,047 பேர் பலியாகி உள்ள நிலையில் 21, 60,156 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x