Published : 22 May 2020 04:05 PM
Last Updated : 22 May 2020 04:05 PM

பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 13,597 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 163 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,597 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 11 பேர் பலியான நிலையில் இதுவரை கரோனாவுக்கு 857 பேர் பலியாகி உள்ளனர். மேலும் கரோனாவிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படும் பிலிப்பைன்ஸ் மக்களால் மீண்டும் கரோனா தொற்று பரவுமா? என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,97,863 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x