Last Updated : 22 May, 2020 10:31 AM

 

Published : 22 May 2020 10:31 AM
Last Updated : 22 May 2020 10:31 AM

பிரிட்டனில் கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தைக் கடந்தது

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் சுகாதார அமைப்பு கூறும்போது, “ பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 338 பேர் கரோனா தொற்றால் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 36, 042 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரிட்டனில் இதுவரை 2,50,908 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளை அதிகளவில் செய்ய அரசு திட்டிமிட்டிருக்கிறது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 96,354 பலியாகி உள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் பிரிட்டன் உள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் பணிக்குத் திரும்பினார்.

இந்த நிலையில் பிரிட்டனில் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும் பிரிட்டனில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்கள் ஜூலை 1-ம் தேதி தான் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் நெருக்கடியை பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியாகக் கையாளவில்லை என்று விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x