Published : 18 May 2020 05:09 PM
Last Updated : 18 May 2020 05:09 PM
ஸ்பெனியினில் இரு மாதங்களுக்குப் பிறகு கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 100க்கு கீழாக குறைந்துள்ளது.
இதுகுறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுக்கு 87 பேர் பலியாகினர். கடந்த இரு மாதங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் முதல் முறையாக நேற்று 100க்கும் கீழாக இறப்பு பதிவாகி உள்ளது. ஸ்பெயினில் இதுவரை கரோனா தொற்றுக்கு 27, 650 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2,31,350 பேருக்கு
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
ஸ்பெயினில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்பெயினில் மார்ச் 14 - ம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 -ம் தேதி தளர்த்தப்பட்டது.
முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் மே 11 ஆம் தேதிக்குப் பிறகு மதுபான நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசு முன்னரே அறிவித்திருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
உலக முழுவதும் கரோனா தொற்றால் 4,805,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மீண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT