Published : 14 May 2020 05:16 PM
Last Updated : 14 May 2020 05:16 PM

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 13,240 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 13,240 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 180க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தென் அமெரிக்க நாடான பிரேசில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸால் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் பிரேசிலும் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பிரேசிலில் கரோனா தொற்று பலி எண்ணிக்கை 13,240 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் 1,90,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,424 குணமடைந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தற்போதைய எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை 15 மடங்கு அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனத்துக்குள்ளான பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா, கரோனா தொற்றைச் சரியாகக் கையாளவில்லை. பிரேசில் மக்கள்தான் ஒன்றிணைந்து இனி அவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையக அக்கறையற்ற அதிபருக்கு அவர்கள் உரிய பதில் கொடுக்க வேண்டும் என்றும் பிரிட்டன் இதழான 'தி லான்செட்' சமீபத்தில் தலையங்கம் வெளியிட்டு விமர்சித்திருந்தது.

முன்னதாக, சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பிரேசிலில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவது தொடர்பாக அதிபர் போல்சினாரோவிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு, ''என்னை என்னச் செய்யச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் பதிலளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x