Published : 14 May 2020 10:57 AM
Last Updated : 14 May 2020 10:57 AM

கரோனா வைரஸ் தொற்று: நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஸ்பெயின் ஆய்வு

கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பவர்கள் குறித்து ஸ்பெயினில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சுமார் 60,000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்பெயினில் மாட்ரிட் நகரம் உட்பட நான்கு நகரங்களில் 10 சதவீதத்திற்கு மேலான மக்கள் கரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். இதில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 2.5% பேர் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றினால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது.

ஸ்பெயினில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 ஆம் தேதி தளர்த்தப்பட்டது.

முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் மே 11 ஆம் தேதிக்குப் பிறகு மதுபான நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசு முன்னரே அறிவித்திருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு இதுவரை 2,71,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,83,227 பேர் குணமடைந்துள்ளனர். 27 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x