Published : 13 May 2020 09:15 PM
Last Updated : 13 May 2020 09:15 PM

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாய்லாந்தில் முதல் முறையாக கரோனா தொற்று இல்லை

தாய்லாந்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, முதன் முறையாக இன்று யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் ,”ஆரம்ப முதலே தய்லாந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அங்கு கரோனா தொற்று எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மே மாதத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே பதிவானது. மே 4-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இறுதியாக, மார்ச் 9 அன்று யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. அதற்கு முன்பாக அங்கு கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக இருந்தது. ஒருவர் உயிரிழந்திருந்தார்.

கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் தாய்லாந்து அரசு, கடந்த வாரத்தில் ஊரடங்கைத் தளர்த்தியது. சமூக இடைவெளியைப் பின்பற்றி உணவு விடுதிகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. தாய்லாந்தில் இதுவரையில் 3,017 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 2,844 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 56 பேர் பலியாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்தை போல நியூஸிலாந்திலும் தொடர்ந்து இரண்டு தினங்களாக யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்தில் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் உட்பட அனைத்து தொழில்களும் இன்று நள்ளிரவு முதல் முழு செயல்பாட்டுக்கு வர உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x