Published : 12 May 2020 09:42 PM
Last Updated : 12 May 2020 09:42 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக 783 பேருக்கு கரோனா தொற்று

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 783 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரசு அமீரகம் அரசு தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,661 ஆக அதிகரித்துள்ளது. 203 பேர் பலியாகி உள்ளனர். 5,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கூட்டாச்சி சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கான நோய் விடுப்பு விடுமுறை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் 12 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 42, 56,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 15, 27,517 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x