Published : 09 May 2020 06:28 PM
Last Updated : 09 May 2020 06:28 PM

யுகேவில் கரோனா தொற்றுக்கு 31,241 பேர் பலி

யுகேவில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 31,241 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுகே சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “யுகேவில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 31,241 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,11,364 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு அதிகப்பட்சமாக அமெரிக்காவில் கரோனா தொற்றால் 78,616 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் அதிக உயிரிழப்பு யுகேவில் ஏற்பட்டுள்ளது.

யுகேவில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வாரம் முதல் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கையில் யுகே இறங்கியுள்ளது.

மேலும், கரோனா தொற்றின் இரண்டாவது பரவலைத் தடுக்கும் வகையில் யுகேவுக்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 40,14,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,76,237 பேர் பலியாகியுள்ளனர். 13,87,181 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x