Published : 08 May 2020 08:48 PM
Last Updated : 08 May 2020 08:48 PM
சீனாவில் தனது மகனால் துன்புறுத்தப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட தாய் ஒருவர் மூன்று நாட்களுக்குப் பிறகும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “மா (57) என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் மா, மட்டும் வீடு திரும்ப தனது கணவரின் தாயாரைத் தேடியுள்ளார் மாவின் மனைவி.
பின்னர் இது தொடர்பாக போலீஸாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் மா தனது தாயைத் தாக்கி மணலில் புதைத்ததாக ஓப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று அந்த மூதாட்டியை மீட்டுள்ளனர். தற்போது உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த மூதாட்டி” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று நாட்களாக தண்ணீர், உணவு இல்லாமல் மூதாட்டி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் சீனாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT