Published : 07 May 2020 08:53 PM
Last Updated : 07 May 2020 08:53 PM

‘வந்தேபாரத் மிஷன்’- ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியர்களுடன் அடுத்தடுத்து புறப்பட்ட 2 விமானங்கள் 

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக அடுத்தடுத்து 2 விமானங்கள் அபுதாபியில் இருந்து புறப்பட்டன.

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியதால் பல நாடுகளில் பணிச்சூழல் காரணமாக தங்கி இருக்கும் இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். இந்திய அரசும் கடம்த மாதம் 25-ம் தேதி முதல் அனைத்துப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கும் தடை விதித்தது.

இதன் காரணாக வளைகுடா நாடுகளில் பணிக்காகச் சென்றிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பியும் முடியவில்லை. இதனால் இந்தியர்கள் தாயகம் செல்ல முடியாமலும், குடும்பத்தினரைக் காண முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்காக ஆன்லைன் பதிவேட்டை இந்திய அரசு தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஏராளமானோர் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தனர். இவர்கள் 7-ம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்தியர்களை அழைத்து வரும் இந்த நடவடிக்கைக்கு ‘வந்தேபாரத் மிஷன்’ என பெயர் சூட்டப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 34 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே அங்கிருந்து முதல் கட்டமாக இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியர்களை அங்கிருந்து அழைத்து வரும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது. அபுதாபியில் இவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டது. பின்னர் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சோதனை முடிந்த பின்னர் அவர்கள் விமானங்களில் ஏறினர். 4 குழந்தைகள் உட்பட 177 இந்தியர்களுடன் முதல் விமானம் அபுதாபியில் இருந்து கொச்சி நகருக்கு புறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 177 இந்தியர்களுடன் அடுத்த விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு நகருக்கு புறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x