Published : 07 May 2020 01:13 PM
Last Updated : 07 May 2020 01:13 PM

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே அதிகரிக்கும் கரோனா தொற்று

சிங்கப்பூரில் மேலும் 788 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

இதுகுறித்து சிங்கபூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, ''சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 788 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 759 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,198 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸால் 20 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அந்நாட்டின் குடிமக்களைவிட தொழிலாளர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் முறையான சுகாதார வசதியற்ற அத்தகைய விடுதிகளிலேயே தற்போது அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

நோய்த் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை முறையை சிங்கப்பூர் அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. கரோனா அறிகுறி வெளிப்படாமலே பலருக்கும் கரோனா தொற்று இருக்கிறது. ஆரம்பக்கட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியாவதும் இல்லை. இந்நிலையில் மிகத் துல்லியமான நவீன பரிசோதனை முறையை பெரிய அளவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x