Published : 30 Apr 2020 08:53 PM
Last Updated : 30 Apr 2020 08:53 PM

ஸ்பெயினில் குறையும் கரோனா பலி எண்ணிக்கை

கரோனா வைரஸால் ஏற்படும் தினசரி பலி எண்ணிக்கை ஸ்பெயினில் குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஸ்பெயினில் கரோனா வைரஸால் ஏற்படும் தினசரி பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் 268 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு 2,13,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,543 பேர் பலியாகியுள்ளனர். 1,32,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்பெயினில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 ஆம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் மே 11 ஆம் தேதிக்குப் பிறகு மதுபான நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 32,20,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,28,239 பேர் பலியாகியுள்ளனர். 10,00,983 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x