Published : 29 Apr 2020 01:40 PM
Last Updated : 29 Apr 2020 01:40 PM

பாகிஸ்தானில் கரோனா தொற்று 14,885 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 700க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 700க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,885 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு நேற்று மட்டும் 26 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 327 ஆக அதிகரித்துள்ளது.

3,425 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,65,911 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் 5,827 பேரும், சிந்து மாகாணத்தில் 5,291 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், இங்கு கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x