Published : 28 Apr 2020 03:06 PM
Last Updated : 28 Apr 2020 03:06 PM

பாகிஸ்தானில் கரோனா தொற்று 14,070 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,070 ஆக அதிகரித்துள்ளது. 300 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 14,070 ஆக அதிகரித்துள்ளது. 300 பேர் பலியாகியுள்ளனர். 3,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 5,640 பேரும், சிந்து மாகாணத்தில் 4, 956 பேரும், பலுசிஸ்தானில் 853 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 6,417 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாகிஸ்தானில் 1,57, 223 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊடகத்துறையில் சிலருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊடகத் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுமாறு பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரம்ஜானைத் தொடர்ந்து மசூதிகளில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x