Published : 25 Apr 2020 03:07 PM
Last Updated : 25 Apr 2020 03:07 PM

கடந்த 10 நாட்களாக சீனாவில் கரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 10 நாட்களில் எந்தவித உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
தற்போது வரை 43 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் கடந்த பத்து நாட்களாக சீனாவில் கரோனா தொற்று காரணமாக எந்தவித உயிரிழப்பு ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸுக்கு 82,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,632 பேர் பலியாகி உள்ளனர். 77,346 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 28,33,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,97,351 பேர் பலியாகியுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வளர்ந்த நாடுகள் என்று அறியப்படும் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x