

கொலம்பிய நாட்டு விமானப் படை விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 12 வீரர்களும் பலியாயினர்.
கொலம்பிய தலைநகரான பொகோடாவில் இருந்து வடகிழக்காக 800 கிமீ தொலைவில் லாஸ் பலோமாஸ் என்கிற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டு அதிபர் ஜுவான் கூறியது "நமது ராணுவ விமானம்விபத்துக்குள்ளானது என்பதை வருத்தத் துடன் தெரிவித்துக்கொள்கி றேன். சில தொழில்நுட்பக் கோளா றுகளால் விமானம் விபத்துக்குள் ளானது " என்றார்.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு, விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாக, தகவல் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது.