Published : 21 Apr 2020 07:30 PM
Last Updated : 21 Apr 2020 07:30 PM

நியூயார்க்கில் மூன்று வாரங்களுக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை குறைந்தது

மூன்று வாரங்களுக்குப் பிறகு நியூயார்க்கில் இறப்பு எண்ணிக்கை 500க்கும் கீழாகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,92,913 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 42,000 ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நியூயார்க் நகரில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் கரோனா தொற்றுக்கு 13,000 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு நியூயார்க்கில் இறப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு கியூமோ கூறும்போது, “கரோனா வைரஸால் மனிதர்கள் இறப்பது துயரமான செய்திதான். ஆனால், இதில் நம்பிக்கை என்னவென்றால் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நியூயார்க்கில் கடந்த 24 மணிநேரத்தில் 478 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். ஆறாவது நாளாக நியூயார்க்கில் நோய்த் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்றார்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

24,81,528 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,47,734 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x