Published : 21 Apr 2020 10:10 AM
Last Updated : 21 Apr 2020 10:10 AM

அமெரிக்காவில் கரோனா தொற்று 7,92,913 ஆக அதிகரிப்பு: விரைவில் 8 லட்சத்தைத் தாண்டும் அபாயம்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,92,913 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,92,913 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 42,000 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு விரைவாக 8 லட்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ,அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று மற்றும் பலி எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில்தான் கரோனா தொற்றால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பால் அதிக உயிரிழப்பைச் சந்திதுள்ளன.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

24,81,528 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,47,734 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x