Published : 19 Apr 2020 04:20 PM
Last Updated : 19 Apr 2020 04:20 PM

பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 7,993 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,993 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 514 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,993 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் கரோனா தொற்றால் 3,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 2,355 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் பாகிஸ்தானில் 50,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்தார். எனினும் மார்ச் மாதம் கொண்டு வந்த ஊரடங்கு மூலம் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு 23,32,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,60,767 பேர் பலியான நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x