Published : 15 Aug 2015 11:14 AM
Last Updated : 15 Aug 2015 11:14 AM

இலங்கைக்கான அமெரிக்க தூதராக இந்தியர் பதவியேற்பு

இலங்கை, மாலத்தீவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அதுல் கேஷப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரியாக அதுல் கேஷப் பணியாற்றியுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் நேற்று முன்தினம் அவர் முறைப் படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக் காவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்ற பிறகு அதுல் கேஷப் கூறியபோது, அழகிய தீவு நாடுகளில் அமெரிக்க தூதராகப் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

அதுலின் தந்தை கேஷப் சந்தர் சென் பஞ்சாபை சேர்ந்தவர். ஐ.நா. சபை ஊழியராகப் பணியாற்றிய அவர், அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலர் ஜோ கால்வர்டை திருமணம் செய்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x