Published : 19 Apr 2020 11:09 AM
Last Updated : 19 Apr 2020 11:09 AM

கரோனா வைரஸ் பலி: ஸ்பெயினில் 20,639 ஆக அதிகரிப்பு

ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 20,639 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில் ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 20,000-ஐக் கடந்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஏற்கெனவே 20,000 -ஐக் கடந்த நிலையில் ஸ்பெயினும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ''கடந்த 24 மணிநேரத்தில் 565 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 20,639 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸால் 1,94,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 4,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்பெயினில் 74,797 பேர் கரோனா வைரஸிலிருந்து மீண்ட ஆறுதலான தகவலையும் ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு 23, 32,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,60,767 பேர் பலியான நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x