Published : 12 Aug 2015 09:24 AM
Last Updated : 12 Aug 2015 09:24 AM
இந்த நூற்றாண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது. 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உலக மக்கள் தொகை இருக் கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. மக்கள் தொகை பிரிவு இயக்கு நர் ஜான் ஆர் வில்மோத், சியாட்டிலில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற மக்கள் தொகையியல் முன்னறிவிப்பு தொடர்பான 2015- கூட்டுப் புள்ளிவிவர கூட்டத்தில் பேசியதாவது:
தற்போது உலக மக்கள் தொகை 730 கோடியாக உள்ளது. இது, 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உயரும். ஆசியாவின் தற் போதைய மக்கள் தொகை 440 கோடி. இது 2050-ல் 530 கோடியாக இருக்கும். அதே சமயம் 2100-ல் 490 கோடி யாகக் குறையும். அதிக இளைஞர்களையும் குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நூற்றாண்டு இறுதியில் மக்கள் தொகை மூப்பை கணிசமான அளவு எதிர்கொள்ள நேரிடும்.
இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், மூத்த குடிமக்களின் எதிர்கால பாதுகாப்பு, ஓய்வூதியம், சுகா தாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 23 சதவீதமாக இருக்கும். ஆப்பிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பிறப்பு வீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 1970களில் நிகழ்ந்த குறைந்த பிறப்பு வீதத்தோடு ஒப்பிடுகையில் இது நான்கில் ஒரு பங்குதான்.
இந்த நூற்றாண்டின் இறு திக்குள் மக்கள் தொகை வளர்ச்சி முடிவுக்கு வராது. ஆப்பிரிக்க சஹாரா துணைக் கண்ட பகுதியில் இன்னும் அதிவேக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிறப்பு வீதம் குறைந்தாலொழிய மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT