Published : 15 Apr 2020 06:11 PM
Last Updated : 15 Apr 2020 06:11 PM

கரோனா தொற்று: ஸ்பெயினில் பலி எண்ணிக்கை குறைகிறது

ஸ்பெயினில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயினின் சுகாதார அமைப்பு, “கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு 523 பேர் பலியாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை 567 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகினர். கடந்த சில நாட்களாக ஸ்பெயினில் கரோனா தொற்று பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் கடந்த 3 மாதங்களில் கரோனா வைரஸ் தொற்றால் 1,74,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,579 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 67,504 பேர் குணமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் கணிசமான அளவு கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x