Published : 15 Apr 2020 03:48 PM
Last Updated : 15 Apr 2020 03:48 PM

பாகிஸ்தானில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நாளும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனவே நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று இம்ரான் கானிடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு அமல்படுத்தியுள்ளார் இம்ரான் கான்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போது, “ஊரடங்கு குறித்த முடிவை நாங்கள் கடினமான சூழலில் எடுத்தோம். ஆனால், மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர். இந்த நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையில் ஏற்றுமதித் துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் காகிதம், சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் உர ஆலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,493 ஆக அதிகரித்துள்ளது. 96 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x