Published : 14 Apr 2020 11:28 AM
Last Updated : 14 Apr 2020 11:28 AM

பிரான்ஸில் மே 11 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள பிரான்ஸில் ஊரடங்கு மே11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் ஊரடங்கு உத்தரவை பெரும்பாலான் நாடுகள் பிறப்பித்துள்ளன. அந்த வகையில் பிரான்ஸ் தற்போது ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படும். சுகாதார நிலையங்கள் தொடர்ந்து இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கரோனா தொற்று உள்ள அனைவருக்கும் விரைவில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று பிரான்ஸ் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 19,25,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x