Published : 13 Apr 2020 11:38 AM
Last Updated : 13 Apr 2020 11:38 AM

சீனாவில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சீனாவில் புதிதாக 108 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள், “சீனாவில் கடந்த வாரத்தில் மட்டும் 108 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 98 பேர் வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள். ஹுபே மாகாணத்தில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்றால் சீனாவில் இதுவரை 3,341 பேர் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு இதுவரை 82,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கு 14 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x