Published : 09 Apr 2020 07:36 PM
Last Updated : 09 Apr 2020 07:36 PM

ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 683 பேர் பலி

கரோனா தொற்றுக்கு ஸ்பெயினில் ஒரே நாளில் 683 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15,238 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் அதிகாரிகள் தரப்பில், “ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு 1,52,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸுக்கு இதுவரை கடந்த 24 மணிநேரத்தில் 683 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 15,238 ஆக அதிகரித்துள்ளது.

7,000க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சுமார் 52,165 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஊரடக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x