Published : 08 Apr 2020 08:04 PM
Last Updated : 08 Apr 2020 08:04 PM

ஸ்பெயினில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14,500 ஆக அதிகரிப்பு

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 757 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சம் கூறும்போது, ''ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 757 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 14,500 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 43,208 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கரோனா வைரஸுக்கு இதுவரை 1,41,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஸ்பெயினில் கடந்த வாரம் கரோனா வைரஸ் தொற்று விகிதமும், இறப்பு விகிதமும் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x