Last Updated : 08 Apr, 2020 07:29 AM

 

Published : 08 Apr 2020 07:29 AM
Last Updated : 08 Apr 2020 07:29 AM

கரோனா பற்றிய நிறைய தகவல்களை உலகச் சுகாதார அமைப்பு மறைத்து விட்டது... அதற்கான நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைக்கிறேன்: பரபரப்புக் குற்றச்சாட்டுடன் ட்ரம்ப் அறிவிப்பு

கரோனா வைரஸ் உலகம் முழுதும் தலைவிரித்தாடுகிறது மற்ற நேரங்களில் செருக்குடன் பேசும் தலைவர்கள் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து நிற்கின்றனர், என்ன பேசுவது, என்ன செய்வது என்பதிலும் பெரும் தடுமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற ஒரு நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு அதிக சாதகமாகச் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டி அமைப்புக்கு தங்களது நிதி பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

நேற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பவில்லை எனில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று கூறி மிரட்டியதைத் தொடர்ந்து இன்று, “உலகச் சுகாதார அமைப்புக்குச் செலவிடும் தொகையை நிறுத்தி வைக்கப் போகிறோம். மிகவும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப் போகிறோம், இது வேலை செய்தால் பிரமாதம்தான். அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் தவறாக செய்கிறார்கள் இது நல்லதல்ல, என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெனிவாவில் தலைமைச் செயலகம் கொண்ட உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா பெரிய அளவில் நிதியைப் பங்களிப்பு செய்து வருகிறது.

“நாம்தான் உலகச் சுகாதார அமைப்பின் பெரும்பங்கு நிதிக்கு பங்களிப்புச் செய்கிறோம், ஆனால் நான் முன்னமேயே பயணத்தடை விதித்த போது உலகச் சுகாதார அமைப்பு என் முடிவை விமர்சனம் செய்தது. அவர்கள் தவறான தகவலை பரப்பிவிட்டனர். நிறைய விஷயங்களில் உலகச் சுகாதார அமைப்பு தவறு செய்து விட்டது. நிறைய தகவல்கள் அவர்களுக்கு கிடைத்தும் அவர்கள் அதனை தெரிவிக்க மறுத்து விட்டனர், அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.” என்று அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் சாடும் போது, “58 மில்லியன் டாலர்கள் நிதியை நாம் உலகச் சுகாதார அமைப்புக்குப் பங்களிப்பு செய்கிறோம், சிலவேளைகளில் இதை விடவும் அதிகமாக அளித்து வருகிறோம். சில வேளைகளில் அவர்கள் செய்யும் திட்டங்களுக்கும் பெரிய அளவில் உதவி புரிகிறோம்.

ஆனால் இதையனைத்தையும் மறு பரிசீலனை செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தவறு செய்து விட்டார்கள், சில மாதங்களுக்கு முன்பாகவே பயணத்தடைகளை பரிந்துரைத்திருக்க வேண்டும். இதன் தாக்கம் அவர்களுக்கு தெரியும், தெரிந்திருக்க வேண்டும், இல்லை நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும். எனவே கவனமாக இதனை ஆராய்கிறோம் எனவே உலகச் சுகாதார அமைப்பிற்கு செலவிடும் தொகையை நிறுத்தி வைக்கப் போகிறேன்” என்றார் அதிபர் ட்ரம்ப்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x