Published : 07 Apr 2020 11:16 AM
Last Updated : 07 Apr 2020 11:16 AM

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் உதவி கேட்கவில்லை: ஈரான்

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் நாங்கள் உதவி கேட்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. ஈரானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்

இந்த நிலையில் இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அப்பாஸி மவ்சாவி கூறும்போது, “கரோனா வைரஸுக்கு எதிரான சண்டயில் ஈரான் அமெரிக்காவிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை. ஆனால், ஈரான் மீதான் பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்பு 10,000 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x