Published : 04 Apr 2020 03:48 PM
Last Updated : 04 Apr 2020 03:48 PM

சீனாவில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் 95 போலீஸார், 46 மருத்து பணியாளர்கள் உயிரிழப்பு

கரோனாவுக்கு எதிரான போரில் 95 போலீஸ் அதிகாரிகளும், 46 மருத்துவ பணியாளர்களும் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

இந்நிலையில் சீனாவில் இன்று நாடு முழுவதும் கரோனா வைரஸால் பலியான பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்தும் மூன்று நிமிடம் நிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சீன தேசியக் கொடியின் முன் மலர் ஏந்தி சீன மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சீனாவில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் 95 போலீஸ் அதிகாரிகளும், 46 மருத்துவ பணியாளர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கரோனா வைரஸுக்கு 3,000க்கு அதிகமான மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்படுள்ளதாக சீன அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 80,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x