Published : 04 Apr 2020 03:12 PM
Last Updated : 04 Apr 2020 03:12 PM

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 2,700 பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் இதுவரை 2,700 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 1000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானின் சுகாதார அமைப்பு கூறும்போது, “பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 130 பேர் குணமடைந்துள்ளனர். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள்தான் அதிகமான நோய்த் தொற்றைச் சந்தித்துள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 1000 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை விதிக்காமல், இம்ரான் கான் காலம் தாழ்த்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த உலக வங்கி சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 11,17,860 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x