Published : 04 Apr 2020 12:34 PM
Last Updated : 04 Apr 2020 12:34 PM

கரோனா வைரஸ் தொற்று: 22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது; ஊரடங்கு குறித்து இம்ரான் கான் பதில்

22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு இதுவரை 2,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸால் பஞ்சாப் மாகாணமும், சிந்து மாகாணமும் அதிகம் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை விதிக்காமல், இம்ரான் கான் காலம் தாழ்த்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்தார்.

இம்ரான் கான் பேசுகையில், “பாகிஸ்தான் பசிக்கும் கரோனாவுக்கும் இடையே உள்ள சமநிலையைக் கண்டறிய வேண்டும். மேலும் 22 கோடி மக்களை அடைத்து வைக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x