Published : 03 Apr 2020 07:28 PM
Last Updated : 03 Apr 2020 07:28 PM

ஈரானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 53,183 பேர் பாதிப்பு

ஈரானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 53,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,294 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 134 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,183 பேர். 3,294 பேர் பலியாகி உள்ளனர். 17,935 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானில் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃபின் செயலாளர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். ஈரானில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரான் சபாநாயகருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலால் ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x