Published : 03 Apr 2020 03:37 PM
Last Updated : 03 Apr 2020 03:37 PM

மெக்கா, மதினாவில் 24 மணி நேர ஊரடங்கு

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினா பகுதிகளில் 24 மணி நேரம் ஊரடங்கு உத்தரவை சவுதி அரேபியா விதித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஈரானில் இதுவரை 50,468 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் கரோனா வைரஸுக்கு 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்க மற்றும் மதினாவில் 24 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவை சவுதி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளிருந்து வெறும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருந்தகங்கள் மற்றும் உணவு நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 3 மணி நேரம் திறந்து இருக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x