Published : 03 Apr 2020 12:45 PM
Last Updated : 03 Apr 2020 12:45 PM

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 10 லட்சம் மக்கள் பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் 1 மில்லியன் (10 லட்சம் ) மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் செயல்படும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹோப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜான் ஹோப்கின்ஸ் அறிக்கையில், ” உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 53,030 பேர் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,983 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஸ்பெயினில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கு அதிகமானவர்கள் அங்கு பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x